சூப்பர் படங்கள் லிஸ்டில் சேர்க்கப்பட வேண்டிய படம் தளபதி.
தளபதியில் முக்கியமாக பேசப்பட்டது நட்பின் ஆளம். சூர்யா - தேவா நட்பு
ஒரு கட்டத்தில் கலேக்டருக்கும் தேவா கோஷ்டிக்கும் table talk நடக்கும். அமைதியா ஆரம்பிச்சு, ரெண்டு ரெண்டு வார்த்தையா பேச ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிச்சு, ரைமிங்கா பேசி, அப்படியே அணல் பறக்குற அளவுக்கு வளரும்.. கொஞ்சம் கொஞ்சமா அந்த சூடு ஏறும் பாருங்க. அது ஒரு அருமையான கட்டம். கடைசி வரை அரவிந்த்சாமி கூலா பேசுவாரு பாருங்க. அப்படித்தான் அவரு நிறைய பேர் மனசுல இடம் பிடிச்சாரு.
"நிறுத்தனும்.. எல்லாத்தையும் நிறுத்தனும்" --> இது இப்போ வரைக்கும் பேர் போட்ட வசனங்களில் ஒன்று
இதுக்கு மம்முட்டி ஒத்த வார்த்தையில் பதில் சொல்வார் பாருங்க --> "முடியாது"
தளபதியில ஒரு காட்சி.. ரஜினி ஒரு படிக்கட்டுல உட்கார்ந்திருப்பாரு. ஷோபனா அவரை தேடி அந்த இடத்துக்கு வருவாங்க. அந்த இடத்துல காமேரா ஏங்கல் சூப்பரா இருக்கும். ஷோபனா வந்து "எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க"ன்னுவாங்க. அதுக்கு ரஜினி சைலண்டா இருப்பார். திரும்ப ஷோபனா பேசுவாங்க. "யாருன்னு கேட்க மாட்டீங்களா?"
ரஜினி திரும்பி "யாரு?"ன்னு கேட்பாரு.
அதுக்கு அவங்க "கலேக்டர்"ன்னும்பாங்க.
உடனே ரஜின் எழுந்திருச்சி "உங்களுக்கெல்லாம் வெள்ளை தோளு, நுனி நாக்குல நாலு இங்கிலீஷ் வார்த்தை.. இதெல்லாம் வேணும்" (டயலோக் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்) அப்படி ஆவேசமா ஷோபனாவை பார்த்து கேட்பாரு. அந்த கட்டத்துல ரஜினியோட கோபம், விரக்தி, எல்லாவற்றையும் தாண்டி ஷோபனா மேலே வச்சிருக்கிற காதலும் அந்த வலியும் காட்டுவார் பாருங்க.. வரேவா.. இந்த வீடீயோ க்ளீப் கிடைக்கல. பரவால்ல.. படத்தையே பார்த்துடுங்க. :-)
Sunday, July 27, 2008
64. தளபதி எங்கள் தளபதி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
vanakkam , still remember me...http://naranonlinewithu.blogspot.com/
still is my blogs.....very nice blogs..i enjoying read n watching all the scene
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Post a Comment