ஆரம்பத்துல எனக்கு ஜோதிகாவே பிடிக்காது..
சந்திரமுகி வந்தப்ப கூட அந்த ரோல்ல சிம்ரன் நடிச்சிருந்தா பெட்டர்ன்னு நெனச்சிட்டு இருந்தேன்.. (சிம்ரன் கூட என் ஃபேவரைட் லிஸ்ட்ல இல்ல.. இருந்தும் அப்போது நடிப்புல அவங்க நல்லாதான் செஞ்சிட்டு இருந்தாங்க.. அந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்துலலாம் அவங்க நடிப்பு ம்ம்.. சூப்பர்ல..)
ஜில்லுனு ஒரு காதல் படத்தை பார்த்தப்ப கூட ஜோதிகாவுக்கு சூர்யாவான்னு நொந்துக்கிட்டேன்.. திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன்னு சொன்னப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. ஆனா,
இந்த மொழி படம் வந்துச்சு பாருங்க.. அது அவங்க திருமணம் முடிஞ்சு ஒரு பத்து-இருபது நாள் இடைவெளில வந்துச்சுல.. அந்த படம் ராதா மோகன் - பிரகாஷ்ராஜ் - பிருத்விராஜ் காம்பினேஷன் என்பதால்தான் முதல் நாள் ஷோவுக்கே சென்றோம்.. அந்த இரண்டரை மணி நேரம் படம் ஜோதிகாவை பற்றீய என் எண்ணங்களை முற்றிலும் மாற்றிவிட்டது..
காக்க காக்கக்கு முன்னாடி வரை கவர்ச்சி, பப்லிமாஸ், மாஸ் படங்களாக மட்டுமே நடித்திருந்தார். காக்க காக்கல மட்டும் ஒரு நல்ல வேடம்.. அது நல்லாவே நெஞ்சிருந்தாங்க.. ஆனா, அந்த ரோல்ல அசின் செய்திருந்தா பெட்டரா இருந்திருக்கும்ன்னு தோன்றியது.. அப்புறம் அதுக்கப்புறம் சேம் ஓல்ட் ப்ளட்.. அப்புறம் சந்திரமுகி.. அதுல கண்ணுதான் அவங்களுக்கு ப்ளஸ் பாய்ண்ட்.. அதை தவிர வேறெதுவும் இல்ல.. இதுலேயும் சிம்ரன் நடிச்சிருந்தா பெட்டர்ன்னு நினைச்சேன்..
ஆனா, மொழில...
இவங்களை தவிர மத்தவங்க யாரும் இந்த அளவுக்கு பெர்ஃபெக்ட்டா நடிக்க முடியாதுன்னு தோணுச்சு.. என்னமா நடிச்சிருக்காங்க.. ம்ஹூம்.. வாழ்ந்திருக்காங்க.. ஒரு வாய் பேச முடியாத காது கேளாத பெண் எப்படி ஒவ்வொன்றையும் தன் தின வாழ்க்கையில் எடுத்துக்கிறாங்க; செய்யுறாங்க; பழகறாங்க.. ம்ம்ம்.. ப்ரித்விராஜ் - பிரகாஷ்ராஜையே அலேக்கா தூக்கி முழுங்கிட்டாங்க இவங்க நடிப்பால.. இவங்களுக்குள்ள இவ்வளோ டேலண்ட் இருக்கா?
என்ன ஆச்சர்யம்!- அப்படின்னு நினைக்கிறதுக்குள்ள தன் நடிப்புக்கு முழுக்கு போட்டுட்டாங்க.. அவ்வ்வ்வ்....
இப்போ வருவாங்க.. அப்போ வருவாங்க.. எதாவது படத்துல நல்ல ரோல் கிடைச்சா நடிப்பாங்கன்னு நானும் காத்திருக்கேன் (எனக்கு தெரியுது.. நீங்களும் காத்திருக்கீங்கன்னு).. ஆனா, இன்னும் வரல..
இப்போ ஒரு சின்ன இண்ட்ரோவா ஒரு விளம்பரத்துல தன் கணவர் சூர்யாவோட நடிச்சிருக்காங்க.. அருமை! இன்னும் அப்படியே அழகு பொம்மையாவே இருக்காங்க.. நீங்களும் பார்த்து ரசிங்க:
Saturday, September 5, 2009
79. ஜோதிகா ரிட்டர்ன்ஸ்
Posted by MyFriend at 2:31 AM 1 comments
Labels: விளம்பரம்
Friday, September 4, 2009
78. Love without talking
காதல்...
பேசினால்தான் காதல் வருமா?
இல்லை காதல் வந்தால் பேசிதான் ஆகணுமா?
பேசாமலேயே இந்த காதல் அழகாய் இருக்கே! நீங்களும் பார்த்து ரசிங்க..
Posted by MyFriend at 1:28 AM 2 comments
Labels: காட்சி
Thursday, September 3, 2009
77. இன்னுமா இந்த ஊரு இவரை நம்புது???
திருந்தவே மாட்டார்யா..
சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம்..
இவர் திருந்தவே மாட்டார்யா...
என்ன கொடுமை சார் இது!!!
(வேட்டர்க்காரனில் விஜயின் இண்ட்ரோ சீன்)
Posted by MyFriend at 4:34 AM 0 comments
Labels: காட்சி
Wednesday, September 2, 2009
76. உன்னை போல் ஒருவன்
A Wednesday - ஹிந்தியில் கலக்கிய படம்.
அதை கமலே ரீமேக் பண்றார்ன்னா சும்மாவா?
இதோ வந்துட்டே இருக்குல்ல..
Posted by MyFriend at 4:37 AM 1 comments
Labels: டிரேயிலர்
Tuesday, September 1, 2009
75. பிறந்தநாள் பரிசு
பிறந்தநாள்..
அது நம்முடையதை விட மற்றவர்களுடையதாக இருக்கும்போது நம் அதிகம் சந்தோஷமாக இருக்கிறோம். அவர்களுக்கு வாழ்த்து சொல்வது, சர்ப்ரைஸ் பார்ட்டி நடத்துவது, கேக் வாங்கி/ செய்து தருவது, பரிசு கொடுப்பது (அதுவும் அவங்க ரொம்ப நாளா ஆசைப்படும் பொருள் என்ன என்பதை யோசித்து (இருக்கிற நாலு முடியையும் பிச்சு) அதை தேடி தேடி வாங்கி தருவது), நல்ல ஒரு கடையில் கூட்டமாக உணவருந்துவது, இதுவே பசங்கன்னா எத்தனை பாட்டில் தண்ணீ அங்கே உருளும்ன்னும் தெரியாது.. இப்படி நாள் முழுக்க அன்று நாம் தீபாவளி கொண்டாடுவோம்.
இது நண்பர்கள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மற்றும் காதலர்கள்ன்னு எல்லாருக்கும் பொருந்தும்..
இங்கே இன்னைக்கு நாம பார்க்கப்போறது:
காதலன் தன் காதலிக்கு 12 பிறந்தநாள் பரிசுகள் கொடுத்து அப்படியே தன் காதலை தெரிவிக்கிறான். அதாவது ஒரு மாதத்துக்கு ஒன்னுன்னு அடுத்த பிறந்தநாள் வரைக்கும் சேர்த்து கொடுக்கிறார்..
க்ளைமேக்ஸில் காதலி தன் காதலனுக்கு மேலும் 12 பிறந்தநாள் பரிசுகள் தருவாள். It was really really touching.
பி.கு: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜி3 அக்காவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் இந்த பதிவும் சமர்ப்பணம். இந்த முக்கால் செஞ்சுரியும் உங்களுக்கே! :-)
Posted by MyFriend at 12:01 AM 9 comments
Sunday, April 26, 2009
74. சித்தார்த் நடித்த முதல் படம் எது? (பாய்ஸ் இல்லை)
எல்லாரும் சொல்றாங்க சித்தார்த்துடைய முதல் பாடம் பாய்ஸ் என்று.. இல்லை.. அவர் அதுக்கு முன்னாடியே படத்தில் நடித்திருக்கிறார். ஒரு தமிழ் படம். அதுவும் ஒரு பிரபல இயக்குனரின் திரைப்படத்தில்..
என்ன படம்ன்னு தெரியணுமா? இந்த காட்சியை பாருங்க..
இது கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு காட்சி. பேருந்தில் மாதவன் பின்னால ஒரு அழகான பையன் பேக் மாட்டிக்கிட்டு சிரிச்சு பேசிட்டு இருக்காரே, அவர் யாருன்னு தெரியுதா?
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் சித்தார்த் நடிகனாவதற்க்கு முன் இயக்குனர் மணிரத்னமிடம் உதவி இயக்குனரா இருந்தார். உதவி இயக்குனர்கள் தங்கள் குருவின் படங்களில் அப்பப்போ இந்த மாதிரி துக்கடா கேரக்டரில் நடித்திருப்பார்கள்.. அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சித்தார்த் நடித்து கலக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு காட்சிதான் இது (அடிக்க வர்றீங்களா? வேணாம் விடுங்க..) :-P
Posted by MyFriend at 10:07 PM 10 comments
Labels: காட்சி
Thursday, February 26, 2009
73. பிச்சைக்காரனாக அஜித்
ஆஹா.. கிளம்பிட்டாங்கையா....
விஜய் மக்கள் அஜித் மேலே கடுப்பாதான் இருப்பாங்க.. அதுக்குன்னு இப்படியா அஜித்தை பிச்சைக்காரனாக்குறது???
Posted by MyFriend at 3:00 PM 4 comments
Wednesday, February 25, 2009
72. எல்லா புகழும் இறைவனுக்கே
ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கி மட்டும் பெருமை சேர்க்கவில்லை. விருது வாங்கியதும் அவர் சொன்ன “எல்லா புகழும் இறைவனுக்கே” என்ற வார்த்தை உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் நம் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
கொஞ்சம் ஆங்கிலம் தெரிஞ்சிட்டாலே தமிழில் பேசுவது என்னமோ உலக மாபெரும் குற்றம்போல் ஆங்கிலத்தில் பேசும் பலருக்கு இது கண்டிப்பாக ஒரு பாடமாக அமைய வேண்டும். சபாஷ் ரஹ்மான் சார்!
ஸ்லம்டாக் மில்லியனேர் படம் பார்த்தபோது ‘ம்ம்.. படம் நல்லாதான் இருக்கு!’ என்று தோன்றியது. பாடலும் எப்போதும் போல் ரஹ்மான் ஸ்டைல்.. திரும்ப கேட்கலாம் ரகமாகத்தான் இருந்தது. இதுக்கே ஆஸ்கார் விருதில் இரண்டை அப்படியே அள்ளிட்டு வந்துட்டாரு ரஹ்மான்..
ஆனால், அவர் முன்பு போட்ட ரோஜா, புதிய முகம், பாம்பே படம் பாடல்களுக்கு எல்லாம் எப்போதோ எத்தனையோ ஆஸ்கார் விருது வாங்கியிருக்க வேண்டும். (ஆஸ்கார் கொடுக்கலைன்னா என்ன.. நம்ம மனசால அவருக்கு எத்தனையோ விருது வழங்கியாச்சு ;-)) இந்த ஜைஹோ பாடலை விட அவர் 90-க்களில் போட்ட பல பாடல்கள் சூப்பர் ரகம்!
பரவால்ல.. கிடைச்சிடுச்சு.. கொஞ்சம் லேட்டா ஆனாலும் இசையில் ஒரு புயல் என்றால் அவர் கண்டிப்பா நம்ம ரஹ்மான் தான்! எத்தனை சிகரத்தை தொட்டாலும் அவர் எப்போதும் இப்போது இருப்பதுப்போல் அடக்கமாக இருப்பார். இதுவும் அவரது சீக்ரட் ஆஃப் சக்ஸஸ் (அட.. இதுவும் இவரோட பாடல்தான்!)
Posted by MyFriend at 6:57 PM 2 comments
Labels: விருது
Thursday, January 22, 2009
71. காதலிச்சா தலைக்கு மேலே பல்ப் எறியுமா? மணி அடிக்குமா?
தலைப்பை பார்த்ததுமே என்ன கதைன்னு தெரிஞ்சிருக்கும். அட ஆமாங்க.. சக்கை போடு போட்ட மொழி படத்துலதான் இந்த தத்துவத்தை(!!) சொன்னாங்க.. ”சரி சரி.. இப்போ என்ன.. ஒரு ஊமை பெண்ணுக்கும் இசையமைப்பாளனுக்கும் நடுவில் நடக்கும் காதல் கதையை பற்றிதானே பேசப்போற?”ன்னு சொல்றீங்களா?
இல்லைங்க.. ப்ரித்விராஜ், ஜோதிகா காதல் பற்றி படம் வெளிவந்த புதுசுல பலரும் அலசி ஆராய்ஞ்சிருப்பீங்க. அந்த காட்சிகளில் சில மனதை வருடும் காவியம்மும் இருக்கு, நல்ல கருத்தும் இருக்கு, நகைச்சுவையும் கலந்திருக்கு, வேதனைகளும் படத்தை பார்த்த நம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கு.
இங்கே இன்னைக்கு ப்ரகாஷ்ராஜ், சுவர்ண்மால்யா காட்சி பார்க்கலாம். ஃபுல் அண்ட் ஃபுல் காமெடி கலந்திருக்கும்.. ஜுஸ்ட் ஒரு 5 நிமிடத்துலேயே நட்பு காதலாகி, வீட்டில் அனுமதி பெற்று திருமணம் வரை சென்றிருக்கும். பிரகாஷ்ராஜ் இந்த கட்டத்துல பேசுற ஒவ்வொரு வசனமும் ஷாக்கிங்காகவும், காமெடியாகவும் இருக்கும்..
நான் தெரியாமல்தான் கேட்கிறேன். யாரையாவது நீங்கள் தேவாலயத்திலோ கோவிலிலோ பார்க்குறீங்கன்னு வச்சுக்கோங்க..அவங்க கிட்ட இப்படி கேட்பீங்களா?
“இன்னைக்கு ரெக்கார்டிங் இல்ல; போரடிச்சது. சரி உங்களை நேருல பார்த்து நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்க வந்தேன்..”
இதை யாரிடமாவது சொல்லிப்பாருங்களேன். அவங்களுக்கு ஹர்ட் அட்டாக்கே வந்திருக்கும். ;-)
சரி, நீங்கள் காட்சியை பார்த்து ரசிங்க:
Posted by MyFriend at 10:10 AM 4 comments
Wednesday, January 21, 2009
70. கொஞ்சம் கலாட்டா தொகுப்புகள்..
சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் ப்ளானெட் கலாட்டா நிகழ்ச்சியை பார்த்திருக்கீங்களா? ”நாங்க என்ன சிங்கப்பூர்லயா இருக்கோம் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறதுக்கு?”ன்னு நீங்க என்னை திட்ட ஆரம்பிக்கிறதுக்குள்ள நானே சொல்லிடுறேன். இந்த நிகழ்ச்சியின் சில காமெடி தொகுப்பை நீங்கள் யூடியூப்ல பார்க்கலாம்.
டாக்ஸி ஏறியிருக்கீங்களா நீங்க? இந்த மாதிரியெல்லாம் டாக்ஸி ஓட்டுனரிடம் சொல்லிப்பாருங்களேன்! என்ன நடக்குதுன்னு பார்ப்போம். ;-)
விமானி சொல்லக்கூடாத 5 விசயங்கள் என்ன?
என்னை மிகவும் கவர்ந்தது.. ட்ராஃபிக் போலிஸ்க்கிட்ட இதெல்லாம் சொல்லிப்பார்க்கலாமா? அதுவும் இரண்டாவது சூப்பரா இருக்குல்ல. ;-)
Posted by MyFriend at 9:03 AM 4 comments
Labels: சிங்கப்பூர், நகைச்சுவை
Monday, January 19, 2009
69. நாக்க முக்க கொஞ்சம் வித்தியாசமாக
நாக்க முக்க பாடல் இப்போது பட்டி தொட்டியெல்லாம் கலக்கிட்டு இருக்கு.. ஆனா, இது கொஞ்சம் வித்தியாசமானது. ”A Day in The Life of Chennai" என்ற theme-உடன் சென்னையில் வழக்கமாக நடக்கும் சில சம்பவங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். சினிமா, அரசியல் பற்றியும், நடிகர்களுக்கும் மினிஸ்டர்களுக்கும் வைக்கும் கட்-அவுட், அதுக்கு செய்யும் பாலாபிஷேகம்ன்னு வித்தியாசமாகவே இருக்கு.
இந்த காட்சியை பார்க்கும்போது அப்படியே பாடலின் வரிகளையும் கவனியுங்க. :-)
Posted by MyFriend at 10:48 AM 3 comments
Saturday, January 17, 2009
68. ஒழுங்காதானேடா இருந்தீங்க..
"ஒழுங்காதானேடா இருந்தீங்க..
திடீர்ன்னு எப்படிடா வருது இந்த லவ்வு?
தினமும் பஸ்ஸுல ஒரு பொண்ணு பின்னாடி போனா அதுக்கு பேரு லவ்வு..
ஒரு பொண்ணு கூட பீச்சு, சினிமான்னு போயிட்டு வந்தா அதுவும் லவ்வு..
எங்கேயாவது தூரமா நின்னு ஒரு பொண்ணை பார்த்துட்டே இருந்தா அதுவும் லவ்வா??
பக்கத்துல போய் உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு கூட தைரியம் கிடையாது
கேட்டா கண்ணுலேயே பேசிக்கிறாங்கலாம்..
என்னங்கடா இது..
தடுக்கி விழுவுறவளை தாங்கி பிடிச்சா லவ்வு வருதுடா..
என்ன கருமமோ!
இதெல்லாம் விட ரோட்டுல போகும்போது “எக்ஸ்கியூஸ் மீ, இந்த அட்ரஸ் எக்கே இருக்கு?”ன்னு கேட்டா, தொலைஞ்சா..
அப்புறம், அவள் அட்ரஸை தேடி இவன் அலைய ஆரம்பிச்சிடுறான்.."
இந்த சீன் அனேகமா அனைவரும் பார்த்திருப்போம்.. பிடிச்சிருக்கும். சூர்யா இந்த வசனத்தை பேசும்போது அவர்டைய பாடிலேங்குவேஜ், மேனரிஸம் காட்சிக்கு தேவையான அளவு இருக்கும்..
இதை விடுங்க.. நீ சொன்னியே இந்த மாதி நான் இல்லப்பா. நாங்க ட்ரூ லைவர்ஸ்ன்னு சொல்வங்க இந்த காட்சியிலேயே கடைசியா சூர்யா சொல்வாரே.. அது உங்களுக்கு பொருந்துதான்னு பாருங்க..
”காதல் என்பது கண்ணுல இருந்து வரக்கூடாது! மனசுல இருந்து வரணும்”
இதுதான் உங்க காதல் என்றால், வெற்றிப்பெற என் வாழ்த்துக்களையும் இவ்வேளையில் சொல்லிக்கொண்கிறேன். :-)
Posted by MyFriend at 12:57 PM 14 comments
Labels: காட்சி