சீரியல்ன்னாலே அழுகாச்சின்னு நாமெல்லாம் ஒதுக்கி தள்ளும் காலம் இது. ஆனாலும் பலர் பைத்தியமாய் திரியும் ஒரு சீரியல் கனா காணும் காலங்கள். அப்படியே நம் பள்ளி வாழ்க்கையை படம் பிடித்து காட்டியதுபோல இருந்தததுதான் அதற்கு காரணம். காமேடி, கடி ஜோக்ஸ், நட்புன்னு பசங்க கலக்கியிருப்பாங்க. 300 எபிசோட் வரை வந்துடுச்சு. இப்போ கொஞ்சம் சீரியல்தனமா இழுத்தடிக்கிறாங்க. நடிக்கிற பசங்க ஒரு படி முன்னேறி இப்போ வெள்ளித்திரைக்கும் வர ஆரம்பிச்சுட்டாங்க.
பட்டாளம்ன்னு ஒரு படம். லிங்குசாமி தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கிறது. நதியாதான் படத்தின் ஹீரோயின். பள்ளி கரஸ்பாண்டனா வர்ராங்க. அதுல பத்து பசங்க. சுட்டி பசங்க. அதுல ஒருவனா வினித்தா நடிக்கிற இர்ஃபான் தேர்வாயிருக்கார். மீதி பசங்க யார் யாருன்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சிடும்.
சொல்ல வந்த மேட்டரை விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கேன் பாருங்க. கனா காணும் காலங்கள்ல ஒரு farewell party. அதுல பல பாடல்கள் கலவையில ஒரு ரீமிக்ஸ். வினித் அண்ட் கோ பாடுற மாதிரி. நீங்களும் பாருங்களேன்.
Tuesday, May 27, 2008
3. பசுமை நிறைந்த நினைவுகளே
Posted by MyFriend at 10:00 AM
Labels: சின்னத்திரை, பாடல்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
இன்னிக்கும் நாந்தான் ஃபர்ஸ்ட்டு :))
//சொல்ல வந்த மேட்டரை விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கேன் பாருங்க. //
:))))
//சென்ஷி said...
இன்னிக்கும் நாந்தான் ஃபர்ஸ்ட்டு :))
//
ஹி... ஹி.... ரிப்பீட்டே (பளக்க தோசம்) :))
யார் வேணாலும் அதுல நடிக்கட்டும்.. ஆனா அந்த சூப்பர் ஃபிகர் ப்ரியாவை ஹீரோயினா போட சொல்லுங்க...
இப்போலாம் இரவில் விஜய் டிவி பாக்கும் போது எனக்கு நானே சொல்லிகிறது. " என்னையும் சீரியல் பாக்க வச்சிடாங்களே நாராயணா"
K3 and மதுரை... காதலிக்க நேரமில்லை பழய மாதிரி ஜாலிக்கு நேரமில்லாமல் கொஞ்சம் அழுகாச்சியா மாறிடிச்சி...
Post a Comment